Thursday, December 7, 2017

என் தோழனுக்கு

என் தோழனுக்கு
வெகுளியான ஓர் போர் !
வெளிச்சமான ஓர் அர்த்தம் !
என் கவலையை அழகாக்கும்,
நீ !ஓர் கண்ணாடி....

என் தோல்விகளை
உன் தோல்விகளாக்கினாய்,
உன் வெற்றியை
என் வெற்றியாக்கினாய்....

ஆயிரம் உறவு இங்க இருந்தாலும்
அருமையான ஓர் உறவு
தோழமை....

ஒரே பலூனில் ஊதிய காற்றுகளானோம்,
அதை பிரித்தால் வெறும் வெற்றிடமாவோம்,
எங்கோ இருந்து வந்த நதிகள் கடல்களானோம்
அதை பிரித்தால் வெறும் உப்புகள் ஆவோம்….

என் உணர்வுகளின் உரிமம் உன் உருவம்
உன் பெயரின் முதல் எழுத்து சொல்லும் போது தான் தெரியும்
நாம் வேறு குடும்பம் என்றே......

நம் நட்பை பற்றி சொல்ல
ஒரு நாவல் எழுதிட வேணும்
அதை படிக்க ஒரு யுகமே வேணும்
இப்படிக்கு இரு தேகத்தின் ஒரு உயிர்................ 

நட்பின் வண்ணம்


மனிதன் என்ற வானில் எங்கோ தொலைந்த அன்பு என்ற மழையில்
மறைந்த துன்பம் என்ற சூரியன் மறைய, நட்பு என்ற மேகத்தில் ஒளிந்திருக்கும் வாழ்வு என்ற வானவில்லைத் தேடி தேடி என் தேடல் என்ற நெடிய பயணம்.

நண்பனாசான்

அந்நியனாய் வந்தேன் உன் நண்பனாக்கினாய்
பிடிவாதமாய் இருந்தேன் விட்டுக்கொடுப்பதை கற்பித்தாய்

மதங்களை விட மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினாய்
தேர்வு எழுத தடுமாறிய போது நம்பிக்கையை ஊட்டினாய்

பல தென்மாவட்ட இளைஞர்களின் பாலகன் ஆனாய்
பலருக்கு நீ ஒரு நம்பிக்கை நட்சத்திர மானாய்

நீ பெற்ற டீயுஷன் பணத்தை எங்களுக்கு செலவு செய்தாய்
நீ பெற்ற ஊதியத்தையும் எமக்கு தாரை வார்த்தாய்

விவேகானந்தர் கார்ல் மாக்ஸ் சேகுவரா, ஹோஷோவையும் பயின்றாய்
குரானைப் போல் கீதை பைபிள் ஜெயினிசம் வேதாந்தமும் பயின்றாய்

அனைத்து சாஸ்திரங்களை பயின்ற நீ வானத்தின் ஓசோன்
உன் அனுபவத்தால் உணர்த்தும் எங்கள் ஆன்மிக ஆசான் 

நட்பு

நட்பு


நாம் இத்தனை காலங்கள்
ஒன்றாக இருந்தோம்!

ஆசிரியர் பாடம் நடத்தும் போது
பல சேட்டைகளை செய்தோம்!

சில நினைவுகளுடன் பல
நாட்கள் வாழ்ந்தோம்!
பிரிவு என்னும் வலி வருவதையும்
மறந்து....!

ஆனால்
ஒரு நாள் பிரிவு என்னும்
அந்த வலி நம் மனதில் இடி
போல் வந்து பாய்ந்தது!

அந்த நொடியில் வேறு வழியில்லாமல்
அடுத்த இலக்கை அடைய வேண்டும்
என்ற நிபந்தனையில்

உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்

நம் நட்பின் மறக்க முடியாத
நினைவுகளுடன்!!!!!!

நண்பனின் நட்பு

நண்பன் சந்தன மரம் 

மரமாய் இருந்தாலும் மணக்கும்
மரம், நண்பன் நல்ல குணம்போல,
அரைத்தால் சந்தனக்குழம்பு மணக்கும்
நண்பன் நண்பனுக்கு நட்பால் தரும்
நலங்கள்போல், எரித்தாலும் மணக்கும்
மரம், நண்பனின் நட்பின் தியாகம் போல்.

நட்பெனும் காவியம்

எந்தன் ஆருயிர் தோழியே அறிவாயா? 


என் வாழ்வில் வந்த வரம் நீ என? 
ஒன்றாய் உழைத்த நாட்களில் 
ஒரு கணப்பொழுது கிடைக்கப்பெறின் 
ஓராயிரம் கதை பேசினோம் 

இதயத்தில் வலி இருப்பின் அதற்கு 
உன் இதமான வார்த்தைகள் மருந்தாயின 
உந்தன் பாசமும் நேசமும் எந்தன் 
வாழ்வை ஒளிமயமாக்கின 
என் வாழ்வில் கவிதையான நட்பே 

வருடங்கள் பல உருண்டோடிவிட்டது 
வேலை மாறி வேறிடம் நான் வந்து 
இடம் மாறினாலும் என் இதயம் மாறவில்லை 
நாம் பகிர்ந்து கொண்ட பாச தருணங்கள் 
அழியா ஓவியமாய் என் மனதில் என்றென்றும்

என்றும் நினைத்ததில்லை இப்படி 
நாட்கள் பல பேசாதிருப்போமென! 
ஒவ்வொரு முறை உனை அழைத்தபோதும் 
நேரமில்லை என்றாய் எனை அழைக்க 
உண்மை என அறிந்தும் மனதில் சிறு வலி 

குறுஞ்செய்தி அனுப்பினேன் நொடி நேரம் 
உனக்கு கிடைக்குமென நினைத்து 
அதற்கும் பதில் இல்லை எனும்போது!! 
அறிவேன் உனக்கு அலுவல் பல எனினும் 
நேரமின்மை எனக்கும் தானே! 

அழைக்க வில்லை எனினும் 
மறக்கவில்லை என்றாய் நீ 
பேசவில்லை என்றாலும் 
நான் உந்தன் நினைவின்று 
அகல வில்லை என்றாய் நீ 

இருப்பினும் அன்பு தோழியே! 
அவ்வப்போது ஒரு வார்த்தை 
அலை பேசியாயினும் அன்றி 
அலை செய்தியாயினும் சரி 
வந்தால் மகிழ்வேன் நட்பே!

நட்பு

நட்பு என்பது

கண்களில் இருந்து வரும்
கண்ணீர் அல்ல...
கண்களோடு இணைந்திருக்கும்
கண் இமை போன்றது!